Monday, May 13, 2013

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்

PPost Before “read more” And here is the rest of it










விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய ஈகலப்பை என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. http://tamilcomputertips.blogspot.com/2010/04/blog-post_19.html ஆனால் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு இந்த மென்பொருள் சில சமயம் சரியாக இயங்குவது இல்லை. இதனால் பல நண்பர்கள் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 கம்ப்யூட்டரில்  தமிழில் எழுத்த மிகவும் சிறமப்படுகிறார்கள்.


இனி கவலை வேண்டாம்....விண்டோஸ் 7 மற்றும் 8 பயண்படுத்துபவர்கள் கூகிள் டால்க் மற்றும் ஈமெயில் போன்றவற்றில் தமிழில் எழுத இங்கு குறிப்பிட்ட  NHM Writer  மென்பொருளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள்.










 Download NHM Writer

NHM Writer ஐ இன்ஸ்டால் செய்த பிறகு டைம் பக்கத்தில் வரக்கூடிய இந்த ஐக்கானை கிளிக் செய்து... இந்த Alt+2 Tamil Phonetic Unicode என்ற ஆப்சனை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டால் எளிதாக தமிழில் டைப் செய்யலாம்....

  



மேலும் ஆன் லைனில் நீங்கள் தமிழில் டைப் செய்து அதனை காப்பி செய்து தேவையான இடங்களில் பேஸ்ட் செய்துகொள்ள கூகிள் வழங்கும் இந்த ஆன்லைன் Tamil Writer இணைய தளத்தை பயன்படுத்துங்கள்....


  











Tuesday, May 7, 2013

உங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...



சமூக வலைத்தளங்களில் மிகவும் முக்கியமானதாகவும், பெரும்பாலானோர்களின் செல்லக்குட்டியாகவும் திகழும் ஃபேஸ்புக் பல சிறப்பம்சங்களை தினமும் அறிமுகப்படுத்தியவாறே உள்ளது.
ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படும் இந்த ஃபேஸ்புக் சிலருக்கு நன்மைகளையும் பலருக்கு தீமைகளையுமே செய்துவருவதை உலகறியும். தீமைகளுக்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது ஹேக்கும், விஷமிகளுமே என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கை ஹேக்கிலிருந்து பாதுகாக்கவும் இந்நிறுவனம் பல வழிகளிலும் முயன்று வருகிறது. யானைக்கும் அடிசறுக்கும் என்பதைப்போலவே இவ்வாறான நிகழ்வுகளும். நீங்களும் ஃபேஸ்புக் வழங்கும் பாதுகாப்பு உக்திகளை கடைபிடித்தால் உங்களுடைய கணக்கினையும் பத்திரம்போல் பாதுகாப்பாக்கலாம். சில நச் டிப்ஸ் உங்களுக்காக....

கடவுச்சொல் :


ஃபேஸ்புக் பயன்படுத்துகையில் முக்கியமானதாக கருதப்படுவது கடவுச்சொல். பாஸ்வர்ட் என அழைக்கப்படும் இதை வலுவாக அமைக்கவேண்டும் என்பதே ஃபேஸ்புக்கின் முதன்மையான வேண்டுகோள். இந்த கடுவுச்சொல்லை வலுவானதாக்க குறைந்தது 6 எழுத்துக்கள் கொண்டதாகவாவது இருத்தல் சிறப்பு. அதில் !@#$%^ இம்மாதிரி குறியீடுகளையும் சேர்ப்பது பாதுகாப்பிற்கு முக்கிய வழிவகுக்கும்.

மொபைல் எண்:


மற்றுமொரு பாதுகாப்பு முறையானது சரியான செல்போன் எண்னை கொடுத்து பாதுகாப்பது. வேறு யாராவது பயன்படுத்தினால் உங்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல்கள் கிடைக்கும்.

பாதுகாப்பான பிரௌசிங்:


ஃபேஸ்புக்கில் செக்யூர் பிரவ்சிங் என்ற முறையும் உள்ளது. இதனாலும் ஹேக் நடக்காமல் தடுக்கலாம். இதை பயன்படுத்தினால் சாதாரணமாக http:// என இருக்கும் URL ஆனது https:// என்று மாற்றப்படும். இதனை பயன்படுத்தினால் ஹேக் நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.

லாகின் அப்ரூவல்:


எந்த கணினி உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கை பயன்படுத்தலாம் என்பதையும் நீங்களே தீர்மானிக்கலாம். மொபைல் போன்களில் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதையும் தீர்மானிக்கலாம்.

ஃபேஸ்புக் பயன்பாட்டில் செஷன் என்ற ஒரு முறை உள்ளது. இது நீங்கள் உள்நுழைந்து வெளியேறும் வரையுள்ள நேரம் எனப்படுகிறது. சில நேரங்களில் லாக்அவுட் செய்யாமல் இருந்தால் பிரீவியஸ் செஷன் பகுதிக்கு சென்று லாக்அவுட் செய்துகொள்ளலாம்.

உலவிகளின் பிரைவேட் பிரவ்சிங் என்ற முறையை பயன்படுத்துவதும் சிறப்பானதே!

பாதுகாப்பான முறை:


ஃபேஸ்புக் பயன்படுத்துகையில் ஆங்காங்கே காணப்படும் கேடுகெட்ட சில லிங்க்குகளை கிளிக்செய்கையில் கவனம் தேவை. பெரும்பாலும் ஆபாச படங்களாகவே ஸ்பேம் வைரஸ்கள் பரவி உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கை முடக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

லாக்அவுட்:


ஃபேஸ்புக் பயன்படுத்தி முடித்தவுடன் அதை கண்டிப்பாக லாக்அவுட் செய்யவேண்டும் என்பது ஃபேஸ்புக் நிறுவனத்தின் முக்கியமான வேண்டுகோள். ஏனெனில் ஃபேஸ்புக் செஸன் என்ற முறையானது மிகவும் திறன்வாய்ந்தது. எனவே நீங்கள் உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கை லாக்அவுட் செய்யவில்லை என்றால், சில மாதங்கள் கூட அது அப்படியே இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். வேறு யாராவது கூட அதை பயன்படுத்த முடியும் என்பதை மனதில் வைக்கவும்.


SMS-களை சுவற்றிலிருந்தும் 'டைப்' செய்யலாம்: கூகுளின் புதிய ஐடியா





googles new innovation allows typing smses on walls
இனிமேல் எஸ்எம்எஸ்-களை மொபைல் மற்றும் டேப்லெட்களில் மட்டுமல்லாது நமது வீட்டுச் சுவற்றில்கூட டைப் செய்யலாம். இதற்காக கூகுள் நிறுவனம் புதிதாக ஒரு யோசனையை தனது முந்தைய ப்ராஜெக்ட்டுடன் இணைத்துள்ளது.
கூகுள் ஏற்கெனவே 'ப்ராஜெக்ட் கிளாஸ்' என்ற கண்ணாடியை உருவாக்கிவருவது நினைவிருக்கலாம். அந்த ப்ராஜெக்ட் கிளாசுடன் இந்த புதிய முறையையும் அறிமுகப்படுத்தவுள்ளது.
மொபைல் ‘ஓஎஸ்’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்
SMS-களை சுவற்றிலிருந்தும் 'டைப்' செய்யும் முறையானது லேசர் கிபேட் என அழைக்கப்படுகிறது. இதை பயன்படுத்தினால் நீங்கள் மொபைல் போன் மட்டுமல்லாது எங்குவேண்டுமானாலும் டைப் செய்து அதை எஸ்எம்எஸ் மற்றும் சாதாரண தரவுகளாகவும் மாற்றமுடியும்.
ஆனால் இதற்காக கூகுளின் விசேஷ கண்ணாடி மற்றும் கைகளுக்கும் படத்தில் காட்டப்பட்டுள்ளதை போல சில விசேஷ முறைகளை பின்பற்றவேண்டும். ஆரம்ப நிலையிலுள்ள இந்த சிறப்பு சாதனங்கள் அடுத்த வருடம் வெளியிடப்படலாம் எனத்தெரிகிறது.


Monday, April 29, 2013

Top 10 Free Software Download websites

PPost Before “read more” And here is the rest of it


2.  Soft32






8.  TucowsA

9.  Softpedia

ஒரே கிளிக்கில் எல்லா பயன்பாடுகளையும் மூட...




நாம் கணினியை பயன்படுத்தும் போது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மென்பொருள்கள் அல்லது பயன்பாடுகளை திறந்து வைத்திருப்போம். திடிரென்று கணினியை அணைக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் என்ன செய்வோம்? ஒவ்வொரு பயன்பாடாக சென்று மூடிக்கொண்டிருப்போம். ஆனால் எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் மூடிவிட்டால் எவ்வளவு சுலபமாக இருக்கும்.
இதற்கு தான் ஒரு மென்பொருள் உள்ளது. Close All என்ற இந்த மென்பொருள் கணினியில் நாம் திறந்து வைத்திருக்கும் அத்தனை மென்பொருள்களையும் ஒரே கிளிக்கில் ஒரே நேரத்தில் மூடுகிறது. இது அனைத்து மென்பொருள்களுக்கும் மூடு என்ற சிக்னலை அனுப்பி அதன் மூலம் மூடுகிறது. இது கணினியை அணைக்கும் நேரம் உபயோகமாக இருக்கும்.
இதை நிறுவத்தேவையில்லை. பென் டிரைவிலும் வைத்து பயன்படுத்தலாம். இதற்கு ஒரு குறுக்குவழி (Shortcut) ஒன்றை desktop or quick launch bar இல் ஏற்படுத்தி சுலபமாக பயன்படுத்தலாம்.
தரவிறக்கச்சுட்டி: http://www.ntwind.com/download/CloseAll.zip .
நன்றி!ponmalars.blogspot

Sunday, April 28, 2013

Excel Tips: பயனுள்ள கேமரா கருவி!


Excel Tips: பயனுள்ள கேமரா கருவி!

இடுகையிட்டது YARL 
Excel 2007 பயன்பாட்டில் நம்மில் பலரும் அறியாத ஒரு பயனுள்ள கருவி Camera Tool ஆகும். இந்த கட்டளை கருவி எக்சல் பயன்பாட்டில் உள்ள எந்த ரிப்பன் மெனுவிலும் காணப்படாததால் இதை குறித்து பலரும் அறிந்திருக்க நியாயமில்லை.
இந்த கருவியின் பயன் என்ன என்பதை முதலில் பார்க்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஷீட்களைக் கொண்ட ஒரு எக்சல் கோப்பை உருவாக்குகிறீர்கள். முதல் ஷீட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட செல் ரேஞ்சை மட்டும் ஒரு படமாக எடுத்து மற்றொரு ஷீட்டில் ஆவணத்திற்காக தேவையான இடத்தில் படமாக இணைத்துக் கொள்ளலாம். இதிலுள்ள முக்கிய வசதி என்னவெனில், இப்படி ஒருமுறை படமாக Capture செய்யப்பட்டு, மற்றொரு ஷீட்டில் Paste செய்யப்பட்ட படத்தின் மூலமான,  cell group இல் நீங்கள் ஏதாவது மாறுதல்களை செய்யும் பொழுது, தானாகவே அந்த paste செய்யப்பட்ட படத்திலும் டைனமிக்காக மாற்றம் அப்டேட் செய்யப்படும் என்பது இதனுடைய சிறப்பம்சமாகும்.
இந்த கருவியை முதலில், உங்கள் எக்சல் பயன்பாட்டில் உள்ள Quick Access Toolbar இல் இணைக்க வேண்டும். இதற்கு எக்சலில் இடது மேற்புறமுள்ள Office Button க்கு அருகாமையில் உள்ள Quick Access Toolbar இல் உள்ள கீழ்புறம் நோக்கிய அம்புக்குறியை க்ளிக் செய்து, More Commands பொத்தானை அழுத்தவும்.
அடுத்து திறக்கும் Excel Options திரையில், Choose commands from லிஸ்ட் பாக்ஸில், Commands Not in the Ribbon  என்பதை க்ளிக் செய்யுங்கள். 
இப்பொழுது விரிவாக்கப்படும் கட்டளைகளில், Camera ஐ தேர்வு செய்து Add பொத்தானை அழுத்தவும்.
இப்பொழுது Camera கருவி Quick Access Toolbar இல் இணைக்கப்பட்டுவிடும்.
இனி தேவையான செல்களை தேர்வு செய்து Quick Access Toolbar இல் நாம் இணைத்த கேமரா பொத்தானை அழுத்தவும். பிறகு, பேஸ்ட் செய்ய வேண்டிய ஷீட்டிற்கு சென்று, க்ளிக் மற்றும் ட்ராக் செய்யும் பொழுது, நாம் தேர்வு செய்திருந்த செல்கள் அனைத்தும் ஒரு படமாக (picture) இங்கு இணைக்கப்பட்டுள்ளதை கவனிக்கலாம்.
இதே போன்று எக்சல் அல்லாத பயன்பாடுகளில், பேஸ்ட் கட்டளை மூலமாக, இந்த படங்களை பேஸ்ட் செய்ய முடியும்.
இவ்வளவு நாள் தெரியாம போச்சே!

உங்கள் பிளாக்ஸ்பாட்டை சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்ற


உங்கள் பிளாக்ஸ்பாட்டை சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்ற
இணையத்தில் நம் சொந்த கருத்துக்களை பகிர இந்த பிளாக்ஸ்பாட் தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது. வலைப்பதிவு என்பது என்ன என்று கூட தெரியாமல்  பதிவர்களில் பெரும்பாலானோர்(என்னையும் சேர்த்து) விளையாட்டாக வலைப்பதிவு தொடங்கி பதிவு போடுகிறோம். இப்படி விளையாட்டாக பதிவு போட ஆரம்பித்து நாளடைவில் நாம் விளையாட்டாகா தொடங்கிய வலைப்பதிவு பிரபலமானவுடன் நமக்கென்று ஒரு சொந்த டொமைன் இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றும்.
ஆனால் இப்படி தொடங்கினால் இந்த இப்பொழுது வரும் வாசகர்களை இழந்து விடுவோமோ அல்லது புது டொமைன் வாங்கினால் நாம் தளத்தில் உள்ள அனைத்து விட்ஜெட்டுக்களையும் திரும்பவும் இணைக்கவேண்டுமா என்ற அச்சத்தின் பேரிலேயே பெரும்பாலானோர் டொமைன் வாங்குவதை தவிர்க்கின்றனர். கவைலையை விடுங்கள் பிளாக்ஸ்பாட்டை சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்றுவது எவ்வாறு என்று கூறுகின்றேன். இதை செய்ய நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை நம் பிளாக்கிலேயே செய்து முடித்து விடலாம். (ஆனால் ஒன்று மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள் இப்பொழுது உங்கள் பிளாக்கிற்கு இருக்கும் அலெக்சா ரேங்க் புதிய டொமைன் வாங்கினால் இருக்காது)
  • Dassboard - Settings - Publishing -பகுதிக்கு செல்லுங்கள்.
  • சென்று அங்கு உள்ள Custom Domain என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.வரும் விண்டோவில் உங்களுக்கு வேண்டிய டொமைன் பெயரை சரியாக கொடுக்கவும்.
  • பெயரை கொடுத்து Check Availability என்பதை க்ளிக் செய்யவும். நீங்கள் கொடுத்த URL காலியாக இருந்தால் yourdomain.com is available என்ற செய்தி வரும் இல்லையேல் உங்களுக்கு கொடுத்த பெயருக்கு சார்ந்து உள்ள URL கொடுக்கும் அதில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.
  • அடுத்து வரும் விண்டோவில் Continue to registration என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் உங்களின் தகவல்களை சரியாக பொருத்தி accept கொடுக்கவும்.
  • அடுத்து payment செய்யும் விண்டோ வரும் இதில் உங்களின் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டின் எண்ணை சரியாக கொடுத்து உங்களுடைய domain உருவாக்கி கொள்ளுங்கள்.
  • கீழே உள்ள வீடியோவை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும். 
அவ்வளவு தான் இனி உங்களுடைய பிளாக்ஸ்பாட் URL கொடுத்தால் நேரடியாக உங்கள் புதிய டொமைன் url தளம் ஓபன் ஆகும். ஆகையால் உங்கள் வாசகர்களுக்கும் எந்த கடினமும் இருக்காது.

Friday, April 26, 2013

உங்களின் கணினியை மேம்படுத்த அல்லது இரண்டாவது Harddisk வாங்கப் போகிறீர்களா?

உங்களின் கணினியை மேம்படுத்த அல்லது இரண்டாவது Harddisk வாங்கப் போகிறீர்களா?

உங்களின் கணினியில் இடம் போத வில்லை என புதிதாக ஒரு HardDisk வாங்கினால் நல்லது என நினைக்கிறீர்களா?  புதிதாக ஒரு 500 GB அல்லது 1 TB  வாங்கி வைக்கலாம் என ஒரு யோசனை வைத்திருந்தால் அதை சற்று தள்ளிப் போடுங்கள். அல்லது., கணினியின் செயலி (Processor) மெதுவாக உள்ளது என புதிய  Core i7 / Core i5 Processor  வாங்கி மேம்படுத்துதலை விட ஒரு 120 GB SSD  வாங்கி அதில் உங்களின் Windows + Softwaresஐ பதியும் போது உள்ள வேக மாற்றம் சமமாக இருக்கும்.
நாம் பொதுவாக வாங்கும் IDE, SATA, SATA2  Harddisk அல்லாமல் ஒரு SSD  வாங்குவது பற்றி யோசியுங்கள். நீங்கள் ஒரு புதிய SSD  ங்கி அதில் உங்களின் OS மற்றும் அனைத்து மென்பொருள்களையும் (Photoshop, Coral, AutoCad, 3D Studio Max) போன்ற அதிக செயல் திறன் வேண்டிய அனைத்து மென்பொருளையும் அதிலேயே பதியுங்கள் (Install). இப்போது உங்களின் கணினியில் இரண்டு Harddisk இருக்கும். SSD இல் OS & Software installations. ஏற்கனவே இருந்த Harddiskஇல் பாடல்கள் மற்றும் படங்கள் போன்ற அதிகம் பயன்படுத்தாத (மென்பொருள்கள் மூலம் எடிட்டிங் வேலைகள் செய்யாமல்.. வெறுமனே கேட்பதர்க்கு / பார்ப்பதற்கு மட்டும் பயன்படும் Media கோப்புகள்) பொதுவாக நமது கணினி மெதுவாக இருப்பதன் முக்கிய காரணம் அதன் Harddiskஇன் திறன்.
Kingston , Corsair, Intel, Samsung  போன்ற பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்குங்கள். விலை சாதாரண Harddiskஐ விட அதிகமாகவே இருக்கும். ஆனால் வாங்கியபின் அதன் வேகம் உண்மையிலேயே பிரமிக்கும் வகையில் இருக்கும்.
இது வேகமானது என்பதற்கு என்ன காரணம்?
பொதுவாக நமது வன் தட்டுகள் (harddisk) உள்ள சில தட்டுகள் (Disks.. similar like our DVDs) இருக்கும்.. அதில் தரவுகளை (Data) எழுதுதல் மற்றும் படித்தல் வேலைகள் (Read & Write operations) நடக்கும். ஆனால் SSD களில் அதன் உள்ளே RAM களில் இருப்பது போல Chipகளே இருக்கும். இதனால் இதில் செய்யப்படும் வேலைகளின் வேகம் மிக மிக அதிகமாக இருக்கும்.

கணினி உலகின் புதிய கண்டுபிடிப்பு: MeRAM

கணினி உலகின் புதிய கண்டுபிடிப்பு: MeRAM

SDRAM, DDR, DDR2, DDR3 என்ற வரிசையில் புதிதாக MeRAM (Magneto Electric Random Access memority)  எனும் புது வகை நினைவகம் கடந்த வாரம் நடந்த  2012 IEEE International Electron Devices Meeting in San Francisco வில் அறிமுகம் செய்யப்பட்டது. ““Voltage-Induced Switching of Nanoscale Magnetic Tunnel Junctions” எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் MeRAM பற்றிய தகவல்கள் முதன் முதலில் வெளியிடப்பட்டன. spin-transfer torque (STT) எனப்படும் மின் காந்த தொழில்நுட்பத்தில் மின்சாரத்தில் உள்ள நகரும் எலெகட்ரான் மூலம் தகவல்களை நினைவாகத்தில் எழுதும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்Electron களில் உள்ள காந்தப் பண்பானசுழற்சி” (Magetic property of elctrons – referred as spin in addition to their charge)  எனும் வகையில் இந்த ஆராய்ச்சி நடந்துள்ளதுஆராய்ச்சியாளர்கள் சில சிக்கல்களை சந்தித்தனர், அதிக தகவல்களை எழுத முற்படும் போது அதிக எண்ணிக்கையில் Electron களை சுழலச் செய்வதால் அதிக மின்சாரமும் அதிக வெப்பமும் ஏற்பட்டது, இதை தவிர்க்க மின்சாரத்தில் உள்ள Voltage நேரடியாக பயன்படுத்திப் பார்த்தனர். இப்போது வெப்பமும் ஏற்படவில்லை அதே நேரத்தில் குறைந்த இடத்தில் அதிக தகவல்களை எழுத முடிந்ததுஇதன் மூலம் மிகக் குறைந்த மின்சாரம்(10 – 1000 மடங்கு குறைவு) , மிக அதிக வேகம், அதிக இடம் (5 மடங்கு) மற்றும் மிகக் குறைந்த விலையில் கணினி நினைவகங்களை உருவாக்க முடியும்கணினி மட்டும் அல்லாது செல்போன், TV போன்ற பிற மின்சாதனங்களில் இதை குறைந்த விலையில் பயன்படுத்த இயலும்.

மூடு விழா காணும் தறுவாயில் பிரபல IT நிறுவனங்கள்

மூடு விழா காணும் தறுவாயில் பிரபல IT நிறுவனங்கள்


RIM  – Research In Motion  – Blackberry கைபேசிகளை விற்று புகழ் பெற்ற நிறுவனமான RIM கடும் iPhone, Android போட்டிகளால் வருமாணத்தை பெரிதும் இழந்துள்ளது.
Groupon -  ஐநூறு ரூபா பொருளை நூறு பேர் சேர்ந்து தலா  பத்து ரூபாய்க்கு வாங்குங்கள் என ஒரு கவர்ச்சியான வியாபார உக்தியை அறிமுகம் செய்த இந்த நிறுவனம் திவாலாகி வருகிறது.
BestBuy – அமெரிக்காவின் மிகப் பெரிய கண்ணன் பல்பொருள் அங்காடி இது. சமீபத்தில் அமெரிக்கா முழுவதும் 50 கடைகளை மூடியுள்ளது… Amazon போன்ற இணைய நிறுவங்களின் சவால்களை ஏற்க முடியாமல் உள்ளது.
Yahoo! -  ஒரு காலத்தில் இணையம் என்றாலே Yahoo Chat தான்… இப்போது தான் எந்த வகையான ஒரு நிறுவனம் எனத் தனக்குத் தானே தெரியாமல் தத்தளித்து வருகிறது.
Nokia – Firing People -  சரியான நேரத்தில் Android கைபேசிகளை தயாரிக்காமல் தனது சொந்த இயக்கு தளத்தை விற்க முயற்சித்து இப்போது Finlandல் உள்ள அதன் தலைமை அலுவலகத்தையே  விற்று விட்டது.
அடுத்து வரும் நிறுவனங்கள்
AOL – America Online
Zynga – Angry Birds Company
Dell – YES DELL!!!!
AMD.

பாரதம் சாகுல் ஹமிது விபத்தில் வபாத்தானார்!

பாரதம் சாகுல் ஹமிது விபத்தில் வபாத்தானார்!

வி.களத்தூர் நடுத் தெரு குண்டு கரிம் (பாரதம்) ஹமதுல்லாஹ் அவர்களின் மகன் சாகுல் ஹமிது என்பவர் இன்று  (27/4/2013) அதிகாலை விபத்தில் வபாத்தானார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
இவா் இன்று அதிகாலை குடும்பத்துடன் கொடைக்கானல் சுற்றுலா சென்றனர். அப்போது சுமார் 3.30 மணி அளவில் திண்டுக்கல் அருகில்  டீ அருந்திக்கொண்டு இருக்கும் போது பின் பக்கமாக வந்த லாரி மோதி சம்பவ இடத்திலே வபாத்தானார்(  இவருக்கு திருமணம் ஆகி  ஒரு வருடம்தான் ஆகிறது. இவருக்கு 4 மாத பெண் குழந்தை உள்ளது)  .
இவா் ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினரும், அமீரக காயிதெமில்லத் பேரவை தேரா பகுதி செயலாளரும்  ஆவார். ( அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)